சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் - ஔவையார் (வெண்பா)
- ஆரல்வாய் மொழிக் கோட்டையிலே ஆழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம்.
- கடலோரத்தில் உரல் உருளுது, புரளுது, தத்தளிக்குது, தாளம் போடுது.
- யார் தச்ச சட்டை, தாத்தா தச்ச சட்டை
- ஊழிக்காற்று,பாழும் கிணறு, கூழைக்குடி.
- வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் கீழே விழுந்தான்.
- பச்சைக் குழந்தை வாழைப் பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
- கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
- வியாழக்கிழமை கிழட்டு ஏழை கிழவன் வாழைப் பழத்தில் வழுக்கி விழுந்தான்.
- வாழைப் பழம் வழுக்கி கிழவி வழியில் நழுவி கீழே விழுந்தாள்
- ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நரை முடி
- கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது
- யாரு தெச்ச சட்டை தாத்தா தெச்ச சட்டை
- ஆனை அலறலோடு அலற அலறியோட
- கடலோரம் உரல் உருளுது.
கடலோரம் உரல் உருளுது! - புட்டும் புதுப் புட்டு
தட்டும் புதுத் தட்டு
புட்டைக் கொட்டிட்டு
தட்டைத் தா. - வீட்டுக்கிட்ட கோரை
வீட்டுக்கு மேல கூரை
கூரை மேல நாரை. - துள்ளும் கயலோ
வெள்ளம் பாயும்
உள்ளக் கவலை
எள்ளிப் போகும். - கருகும் சருகும் உருகும்
துகிரும் தீயில் பட்டால்!